Google

சமூக வலைதளம் மூலம் அதிகம் பேர் பார்த்த மொகலாயர் தோட்டம்! காணொளி இணைப்பு

Written on:August 7, 2012
Comments
Add One

நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்ற பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையின் அலுவலக இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தில் YOUTUBE மற்றும் FACEBOOK போன்ற சமூக வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் குடியரசுத் தலைவருடன் எந்த நேரத்திலும் நேரடியாக தொடர்புகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

YOUTUBE சமூக வலை தளத்தில் குடியசுரத் தலைவர் மாளிகையில் உள்ள `மொகல் கார்டன்’ என்று அழைக்கப்படும் மொகலாயர் தோட்டம் உள்பட 8 காணொளி காட்சிகள் பதிவு செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. இந்த காணோளியினை அதிகம் பேர் இதுவரை கண்டுகளித்துள்ளனர். இதனால் இந்த காணொளிகள் பொது மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.

இதேபோல், பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக பதவி யேற்றபோது எடுத்த காணொளி காட்சிகள், குடியரசுத் தலைவர் மாளிகையின் முன்புறத் தோற்றங்கள், பாரா விளையாட்டு வீரர்களுடன் குடியரசுத் தலைவர் சந்திக்கும் காட்சிகள், குடியரசுத்தலைவர் மாளிகை முன்பு அவருக்கு அளிக்கப்படும் வரவேற்பு, வழியனுப்பு நிகழ்வுகளின் காணொளி தொகுப்பினை YOUTUBE சமூகவலைதளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மொகலாயர் தோட்டத்துக்கு அடுத்தபடியாக, அருணாச்சல பிரதேச முதல்-அமைச்சர் நபாம்துகி குடியரசுத் தலைவரை சந்திக்கும்போது எடுத்த காணொளி காட்சியை அதிகம்பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்பு சூலை 26ஆம் தேதியில் இருந்து இதுவரை குடியரசுத் தலைவர் தொடர்பான 55 படங்கள் `FACEBOOK’ சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில், பல் வேறு மாநில ஆளுநர்கள், முதல்-அமைச்சர்கள், வெளிநாட்டினர் ஆகியோர் குடியரசுத் தலைவருடன் சந்திக்கும் காட்சிகள், குழந்தைகள் குடியரசுத் தலைவருக்கு ராக்கி கயிறு கட்டும் காட்சிகள் ஆகியவை அடங்கும்.

குடியரசுத் தலைவர் மாளிகையின் புதுப்பிக்கப்பட்ட இணைய தளத்தில் காணொளி காட்சிகள் அரங்கும் உள்ளது. இந்த பட்டனை அழுத்துவதன் மூலம் பொது மக்கள் நேரடியாக குடியரசுத் தலைவருடன் தொடர்பு கொள்ள முடியும். மேலும், தங்களது குறைகளை குடியரசுத் தலைவருக்கு நேரடியாக “ஹெல்ப் லைன்” மூலம் தெரிவிக்க முடியும்.

2 Comments add one

  1. ceecom says:

    தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

    வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

    தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்…..

    ஆகஸ்ட் – 26-ல் சென்னை மாநகரில்…..

    அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்…..

    மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
    95666 61214/95666 61215
    9894124021

  2. வணக்கம் ,
    உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
    நன்றி.
    http://www.thiraddu.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

WP Like Button Plugin by Free WordPress Templates